செல்போனுடன் உறக்கமா?


அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம்தான்.அலைபேசியில் அதிகம் பேசப் பேச பணம் அலையாகக் கரைகிறது. முன்பெல்லாம், தொலைபேசி மட்டுமே இருந்த இல்லங்களில் கூடுதலாக அலைபேசிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அலைபேசியின் செலவு அவசியமற்ற செலவு என்பதை பெரும்பாலானவர்கள் உணராத அளவுக்கு அலைபேசிப் பைத்தியம் மக்களை ஆட்கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை.



  • செல்போனுடன் விழித்து, அதனுடனே நாள் முழுவதும் வேலை செய்து, உறங்கும் தருவாயிலும் செல்போனுடனே இருக்கிறோம்.இந்நிலையில் கலிபோர்னியா சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.



  • அதன்படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மைத் தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைகளில் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர், 10 ஆண்டுக்கும் மேலாக செல்போனை அருகில் வைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.



No comments:

Post a Comment