புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி.

இயல்பான சாதரண ஜீன்களில் திடீர்மாற்றம் ஏற்பட்டு அவை மிகவேகமாக பெருக்கமடைந்து ஒரு திசுவிலிருந்து மற்றொரு திசுவிற்கு பரவி கட்டியாக மாறி புற்று நோயாகிறது. சாதரண கட்டிகளும் புற்று நோயாகா மாறக் கூடிய அபாயம் உண்டு. சாதரண கட்டிகள் இறந்த செல்களின் குவியல் என சொல்லலாம். அவற்றில் புதிய செல்கள் வளர முடியாமல் அந்த இடத்தில் மாற்றம் ஏற்பட்டு அவை புற்று நோய் செல்களாக மாறிவிடும். 

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.


No comments:

Post a Comment